search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு தாக்குதல்"

    மதுரை அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பங்களா பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மாயக்காள் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரிமலை என்பவரது மகன் சுரேஷிடம் ரூ. 10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் மாத வட்டியை சரியாக கொடுத்து வந்ததாகவும், ஆனால் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கந்து வட்டி கேட்டு தாக்கியதாக மாயக்காள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தினார். சுரேஷ், அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் மாரிச்சாமி ஆகிய 3 பேர் மீது கந்து வட்டி வழக்கில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை, போலீசார் கைது செய்தனர்.

    ×